Payload Logo
உலகம்

கமேனியை கொன்றால் தான் மோதல் முடிவுக்கு வரும்! பெஞ்சமின் நெதன்யாகு பேச்சு!

Author

castro

Date Published

இஸ்ரேல் : இஸ்ரேல் மற்றும் ஈரான் இடையேயான மோதல் தீவிரமடைந்து வரும் நிலையில் நேற்று ஈரானின் தலைநகர் தெஹ்ரான் மீது இஸ்ரேல் ஏவுகணைத் தாக்குதலை தீவிரப்படுத்தியுள்ளது. அதன் ஒரு பகுதியாக ஈரானின் அரசு செய்தி தொலைக்காட்சி சேனலான ”Abruptly” மீது இஸ்ரேல் தாக்குதல் நடத்தியுள்ளது. செய்தி வாசிப்பின்போது தாக்குதல் நடந்ததால், வாசிப்பாளர் உடனடியாக அங்கிருந்து ஓடினார். இந்த காட்சி தற்போது வைரலாகி கொண்டு இருக்கிறது.

எனவே, இந்த பதற்றமான சண்டையில், இஸ்ரேல் பிரதமர் பெஞ்சமின் நெதன்யாகு ஒரு பரபரப்பான கருத்தைச் சொல்லியிருக்கிறார். ஈரானின் மிகப் பெரிய தலைவர் அயதுல்லா அலி கமேனியை கொன்றுவிட்டால் , இந்த மோதல் முழுவதும் முடிந்துவிடும் என்று அவர் கூறியுள்ளார். கடந்த ஜூன் 16- ஆம் தேதி அன்று ஏபிசி நியூஸ் என்ற தொலைக்காட்சிக்கு அளித்த பேட்டியில் இந்த விஷயத்தை அவர் பேசினார்.

இந்தப் பேச்சு, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், “இஸ்ரேல் கமேனியை கொல்லத் திட்டமிடவில்லை” என்று சொன்னதற்கு பதிலாக வந்தது. “கமேனியைகொல்வது சண்டையை முடிக்கும், பெரிதாக்காது,” என்று நெதன்யாகு தெளிவாகச் சொன்னார். ஈரானின் ஆட்சி, கடந்த 50 ஆண்டுகளாக மத்திய கிழக்கில் தீவிரவாதத்தைப் பரப்புவதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

நெதன்யாகு, ஈரானின் அணு ஆயுதத் திட்டத்தை “ஹிட்லரின் அணு ஆயுத முயற்சி” மாதிரி என்று ஒப்பிட்டார். இது இஸ்ரேலுக்கு மட்டுமல்ல, அமெரிக்கா உட்பட உலக நாடுகளுக்கே ஆபத்து என்று அவர் எச்சரித்தார். “இன்று இஸ்ரேலின் டெல் அவிவ் நகரம் தாக்கப்படுகிறது, நாளை இது அமெரிக்காவின் நியூயார்க் ஆகலாம். அமெரிக்காவை முதலில் பாதுகாக்க வேண்டும் என்று எனக்குப் புரிகிறது, ஆனால் அது அழிந்துவிடக் கூடாது,” என்று அவர் கூறினார்.

அது மட்டுமின்றி, ஈரானின் அணு ஆயுத முயற்சிகளைத் தடுப்பதற்கும், மத்திய கிழக்கில் அமைதியைக் கொண்டுவரவும் என்று அவர் விளக்கினார். இதற்கு அமெரிக்காவின் ஆதரவு மிக முக்கியம் என்றும், டிரம்பின் ஆதரவுக்கு நன்றி என்றும் அவர் சொன்னார். இதற்கு பதிலாக, ஈரானின் தலைவர் கமேனி, இஸ்ரேலின் தாக்குதல்களுக்கு “கடுமையான பதிலடி” கொடுப்போம் என்று எச்சரித்துள்ளார். இஸ்ரேல், ஈரானின் முக்கியமான அணு ஆயுத மையங்களான நதான்ஸ் மற்றும் இஸ்ஃபஹானை வான்வழியாகத் தாக்கியது.

இதற்கு பதிலாக, ஈரான் இஸ்ரேலின் டெல் அவிவ் மற்றும் ஹைஃபா நகரங்களை ஏவுகணைகள் மற்றும் ட்ரோன்கள் மூலம் தாக்கியது. இந்த மோதலில், ஈரானில் 230 பேர் இறந்ததாகவும், இஸ்ரேலில் 24 பேர் கொல்லப்பட்டதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. கமேனி இப்போது டெஹ்ரானில் ஒரு ரகசிய இடத்தில் பாதுகாப்பாக இருப்பதாகவும், அவரது குடும்பத்துடன் இருப்பதாகவும் ஈரான் இன்டர்நேஷனல் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.