Payload Logo
தமிழ்நாடு

பொங்கலுக்கு 6 நாள்கள் தொடர் விடுமுறை... அறிவிப்பை வெளியிட்டது தமிழக அரசு!

Author

gowtham

Date Published

tn govt

சென்னை:பொங்கலுக்கு மேலும் ஒருநாள் அரசு விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, ஜனவரி 14 முதல் 16 வரை பொங்கலுக்கு அரசு விடுமுறையாக முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், 17ஆம் தேதி அரசு வேலை நாளாக இருந்தது. மேலும், வார இறுதி நாட்களான 18, 19 ஆகிய நாள்கள் விடுமுறை என்பதால் 17ஆம் தேதியும் விடுமுறை விட கோரிக்கை எழுந்தது.

இந்த நிலையில், இதையேற்று 17ஆம் தேதியும் விடுமுறையாக மாநில அரசு அறிவித்துள்ளது. இதன்மூலம் 14-19ஆம் தேதி வரை தொடர் விடுமுறையாகும். இது தொடர்பாக, தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில், "இவ்வாண்டு தமிழ்நாட்டில் 14.01.2025 செவ்வாய்கிழமை அன்று தைப் பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதாலும், 15.01.2025, 16.01.2025. 18.01.2025 மற்றும் 19.01.2025 ஆகியவை அரசு விடுமுறை நாட்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், மாணவர்கள், பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த ஊருக்குச் சென்று பண்டிகையை மகிழ்வுடன் கொண்டாடும் வகையில் அதற்கு இடைப்பட்ட நாளான 17.01.2025 (வெள்ளி கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அறிவிக்குமாறு பலதரப்பிலிருந்து அரசுக்கு கோரிக்கைகள் வந்தது.

அக்கோரிக்கைகளை ஏற்று, தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின், மாணவர்கள். அவர்தம் பெற்றோர்கள் ஆசிரியர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் தங்களது சொந்த வார் சென்று பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில், 17.01.2025 (வெள்ளி கிழமை) அன்று தமிழ்நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள்.

பொதுத்துறை நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் மற்றும் அனைத்து கல்வி நிறுவனங்களுக்கும் உள்ளூர் விடுமுறை அளித்தும், அவ்விடுமுறையை ஈடுசெய்யும் வகையில், 25.01.2025 (சனிக்கிழமை) அன்று பணி நாளாக அறிவித்தும் உத்தரவிட்டுள்ளார்" இவ்வாறு குறிப்பிடப்பட்டுள்ளது.