உங்கள் முக அழகை அதிகரிக்க தூக்கி எறியப்படும் ஆரஞ்சு தோலே போதும்..!
Author
k palaniammal
Date Published

ஆரஞ்சு பழத்தை நாம் சாப்பிட்டுவிட்டு அதன் தோலை தூக்கி எறிந்து விடுவோம் ஆனால் அதை வைத்து சூப்பரான முக அழகை அதிகரிக்கக் கூடிய பல குறிப்புகளையும் இப்பதிவில் பார்ப்போம்.
ஆரஞ்சு பவுடர்ஆரஞ்சு தோலை வெயிலில் நன்கு காய வைத்து பவுடராக்கி அதை ஒரு காற்று புகாத டப்பாவில் அடைத்து வைத்துக் கொள்ள வேண்டும். பிறகு தேவைப்படும் போது பயன்படுத்திக் கொள்ளலாம். ஆரஞ்சு தோலை வெறுமையாக பயன்படுத்தக் கூடாது. அது தோலுக்கு எரிச்சலை கொடுக்கும். மேலும் வாரத்தில் இரண்டு நாட்கள் மட்டுமே பயன்படுத்த வேண்டும்.
பயன்படுத்தும் முறைகள்
முகப்பரு இருக்கும்போது இந்த ஆரஞ்சு தோல் பவுடரை பயன்படுத்த வேண்டாம் இது மேலும் எரிச்சலை உண்டாக்கும்.
ஆகவே முக அழகிற்காக பல ரசாயனம் கலந்த க்ரீம்களையும் , பவுடர்களையும் பயன்படுத்தினால் விரைவில் தோல் சுருக்கம் ஏற்படும். இளம் வயதிலேயே முதுமை தோற்றம் காணப்படும். எனவே இயற்கையாக கிடைக்கக்கூடிய பழச்சாறு மற்றும் நாம் தூக்கி எறியப்படும் பழத்தின் தோல் போன்ற இயற்கையான பொருட்களை வைத்தே நம் அழகை பராமரித்துக் கொள்ளலாம்.