Fact Check: பாடகி ஆஷா போஸ்லே மரணம்.? மகன் கூறிய உண்மை தகவல்.!
Author
gowtham
Date Published

டெல்லி :ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒன்று சமூக ஊடகங்களில் ட்ரெண்டிங் ஆகிக்கொண்டே இருக்கிறது. நேற்று கூட, பிரபல பாடகி ஆஷா போஸ்லேவின் மரணச் செய்தி செய்திகளில் வந்தது. இந்தச் செய்தியைக் கேட்டு அனைவரும் அதிர்ச்சியடைந்தனர்.
ஆஷா போஸ்லேவின் மரணச் செய்தி சமூக ஊடகங்களில் வைரலானது, அதைத் தொடர்ந்து அவரது மகன் இந்தச் செய்திக்கு முற்றுப்புள்ளி வைத்தார். இது தொடர்பாக, இ டைம்ஸ் ஊடகத்திடம் பேசிய அவர், "இந்தச் செய்தி தவறானது. அம்மா முற்றிலும் நலமாக இருக்கிறார்" என்றார்.
அதாவது, ஆஷா போஸ்லேவின் மரணம் குறித்த வதந்தியை ஷபானா ஷேக் என்ற பயனர் ஃபேஸ்புக்கில் பரப்பினார். புகழ்பெற்ற பாடகி மாலை அணிந்திருக்கும் படம் மற்றும் அவரது மறைவை அறிவிக்கும் தவறான தலைப்புடன் ஒரு பதிவை சமூக வலைதளத்தில் பகிர்ந்து கொண்டார்.
அந்தப் பதிவில், "புகழ்பெற்ற பாடகி ஆஷா போஸ்லே காலமானார் - ஒரு இசை சகாப்தத்தின் முடிவு (01 ஜூலை 2025)" என்று எழுதப்பட்டிருந்தது. இது சமூக ஊடகங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர், அந்த தகவல் உண்மையல்ல என ஆஷா போஸ்லேயின் அவரது மகன் உறுதிப்படுத்தினார்.