Payload Logo
தமிழ்நாடு

விஜய்யுடன் சேர்ந்து அரசியல் செய்வது கடினம் - சீமான் ஓபன் டாக்!

Author

bala

Date Published

vijay and seeman

சென்னை :புழல் மத்திய சிறையில் காவலர்களால் கொடூரமாக தாக்கப்பட்ட பன்னா இஸ்மாயில், பிலால் மாலிக், மற்றும் போலீஸ் பக்ரூதீன் ஆகியோரின் குடும்ப உறுப்பினர்களை நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் சந்தித்தார். இந்த சந்திப்பு சிறையில் நடந்த காவலர்களின் அத்துமீறல் மற்றும் மனித உரிமை மீறல்களுக்கு எதிரான நாம் தமிழர் கட்சியின் கண்டனத்தை வெளிப்படுத்தும் வகையில் நடைபெற்றது. சந்திப்பின்போது, பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறிய சீமான், இந்த சம்பவத்திற்கு நீதி கிடைக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். மேலும், சிறையில் இத்தகைய தாக்குதல்கள் தொடர்ந்தால், நாம் தமிழர் கட்சி சார்பில் மிகப்பெரிய போராட்டம் நடத்தப்படும் என்று எச்சரித்தார்.சந்திப்பிற்குப் பிறகு, சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த சீமான், புழல் சிறை விவகாரம் மற்றும் தற்போதைய அரசியல் நிலவரங்கள் குறித்து தனது கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். புழல் சிறையில் நடந்த தாக்குதல் குறித்து கடும் கண்டனம் தெரிவித்த அவர், “இது அரச பயங்கரவாதத்தின் உச்சம். சிறைவாசிகளை இப்படி கொடூரமாக தாக்குவது மனித உரிமைகளுக்கு எதிரான செயல். இதற்கு நீதி கிடைக்காவிட்டால், நாம் தமிழர் கட்சி சும்மா இருக்காது,” என்று திட்டவட்டமாகக் கூறினார். மேலும், இத்தகைய சம்பவங்கள் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கேடு மற்றும் அரசின் அலட்சியத்தை வெளிப்படுத்துவதாகவும் அவர் விமர்சித்தார். அடுத்ததாக விஜயின் த.வெ.க உடன் இணைந்து அரசியல் செய்வது குறித்த கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு பதில் அளித்த அவர் விஜய் பெரியாரை தனது கொள்கைத் தலைவராக ஏற்றிருப்பதாகக் கூறியுள்ளார். பெரியாரின் கொள்கைகளைப் பின்பற்றுபவர் ஒருவருடன் இணைந்து அரசியல் செய்வது மிகவும் கடினமானது. எங்களின் தமிழ்த் தேசியக் கொள்கைகளும், பெரியாரின் கொள்கைகளும் ஒருபோதும் ஒத்துப்போகாது,” என்று அவர் தெரிவித்தார். இது, விஜய்யின் அரசியல் பயணத்தில் நாம் தமிழர் கட்சியுடன் கூட்டணி வைப்பதற்கு சாத்தியமில்லை என்பதை உறுதிப்படுத்தும் வகையில் இருந்தது.