Payload Logo
இந்தியா

குஜராத் முன்னாள் முதலமைச்சர் விஜய் ருபானியின் உடல் அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைப்பு.!

Author

gowtham

Date Published

Vijay Rupani - Plane Crash

குஜராத் :அகமதாபாத்தில் நடந்த ஏர் இந்தியா விமான விபத்தில் கொல்லப்பட்ட 241 பயணிகளில் ஒருவரான குஜராத் முன்னாள் முதல்வர் விஜய் ரூபானியின் உடல் இன்று டிஎன்ஏ சோதனை மூலம் அடையாளம் காணப்பட்டது. இன்று (ஜூன் 15) காலை 11.10 மணிக்கு ரூபானியின் டிஎன்ஏ பரிசோதனை செய்யப்பட்ட பின்னர், அவரது உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.

கடந்த 12-ம் தேதி விமான விபத்து நடந்த நிலையில், டிஎன்ஏ (DNA) பரிசோதனையின் மூலம் இன்று காலை உடல் அடையாளம் காணப்பட்டதாக மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக குஜராத் சுகாதார அமைச்சர் ரிஷிகேஷ் படேல் கூறுகையில், 'ரூபானியின் உடல் ராஜ்கோட்டில் தகனம் செய்யப்படும் என்றும், அதற்கான வழிமுறைகள் உருவாக்கப்பட்டு வருவதாகவும்' தெரிவித்தார்.

இதற்கிடையில், டிஎன்ஏ சோதனை மூலம் இதுவரை 32 பாதிக்கப்பட்டவர்களை அதிகாரிகள் அடையாளம் கண்டுள்ளனர், மேலும் 14 பேரின் உடல்கள் அவர்களது குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பலரது உடல்கள் அடையாளம் காண முடியாத அளவுக்கு எரிந்து போயிருந்தன அல்லது வேறுவிதமாக சேதமடைந்திருந்ததால், துயரத்தில் பலியானவர்களின் அடையாளத்தை நிறுவ அதிகாரிகள் டிஎன்ஏ சோதனைகளை மேற்கொண்டு வந்தனர்.

பாதிக்கப்பட்டவர்களின் குடும்பங்களுடன் ஒருங்கிணைக்க 230 குழுக்கள் அமைக்கப்பட்டதாக அதிகாரிகள் முன்பு தெரிவித்தனர். இதுவரை அடையாளம் காணப்பட்ட பாதிக்கப்பட்டவர்கள் குஜராத் மற்றும் ராஜஸ்தானின் வெவ்வேறு இடங்களைச் சேர்ந்தவர்கள் என்று கூடுதல் சிவில் கண்காணிப்பாளர் டாக்டர் ரஜ்னிஷ் படேல் செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.