Payload Logo
இந்தியா

ஈரானின் பிரத்யேக வான்பாதை.., 290 இந்தியர்கள் தாயகம் திரும்பினர்.!

Author

gowtham

Date Published

Operation Sindhu flight

ஈரான் :ஈரான் - இஸ்ரேல் போர் பதற்றம் காரணமாக ஈரானில் தங்கி கல்வி பயின்று வரும் இந்திய மாணவர்களை மீட்க இந்திய அரசு 'ஆபரேஷன் சிந்து' மூலம் நடவடிக்கை எடுத்து வருகிறது.

இந்தியாவின் ஆபரேஷன் சிந்து நடவடிக்கைகாக ஈரான் தனது வான்வெளி கட்டுப்பாடுகளைத் திறந்த பிறகு, ஜம்மு-காஷ்மீரைச் சேர்ந்த மாணவர்கள் மற்றும் மத யாத்ரீகர்கள் உட்பட 290 இந்தியர்கள் அடங்கிய மற்றொரு குழு நேற்றிரவு டெல்லியை வந்தடைந்தது. இந்தியா ஜிந்தாபாத் என்று அவர்கள் மகிழ்ச்சியுடன் முழக்கமிட்டனர்.

அதைத் தொடர்ந்து துர்க்மெனிஸ்தானின் அஷ்காபாட்டில் இருந்து மற்றொரு விமானம் இன்று அதிகாலை 3 மணிக்கு தரையிறங்கியது. கடந்த வியாழக்கிழமை, 110 மாணவர்கள் ஏற்கனவே ஆர்மீனியா மற்றும் தோஹா வழியாக இந்தியா திரும்பியுள்ளனர்.

இதுவரை, இந்த நடவடிக்கையின் கீழ் 517 இந்தியர்கள் தாயகம் அழைத்து வரப்பட்டுள்ளனர் என்று வெளியுறவுத்துறை செயலாளர் அருண் குமார் சாட்டர்ஜி உறுதிப்படுத்தினார். இஸ்ரேலுடன் தற்போது போரில் ஈடுபட்டுள்ள ஈரான், சுமார் 1,000 இந்தியர்களை வெளியேற்றுவதற்காக மூன்று விமானங்களுக்கு அதன் வான்வெளியைத் திறந்தது.

unknown node

இஸ்ரேலிய தாக்குதலுக்குப் பிறகு இந்தியர்கள் தெஹ்ரானில் இருந்து மஷாத்துக்கு மாற்றப்பட்டனர். வெளியேற்றும் விமானங்கள் புது டெல்லியால் ஏற்பாடு செய்யப்பட்டு ஈரானிய விமான நிறுவனமான மஹானால் இயக்கப்பட்டன. இந்திய அதிகாரிகள் ஈரானிய விமான நிறுவனத்துடன் ஒருங்கிணைந்து, மாணவர்கள் புறப்படுவதற்கு முன்பு தெஹ்ரானில் இருந்து மஷாத்துக்கு அழைத்துச் சென்றனர்.